Posts

Showing posts from March, 2019

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (1-10)

Image
நிறோஷ் ஞானச்செல்வம்:  கொல்லயில் தானோடி கண்ணம்மா - நீ           கோபச் செந்நிறமோ ஒல்லைக் கெதிர்ப்பதமோ கண்ணம்மா - நீ           ஓதக்கடல் நுரையோ!                                                         *** விவேக்பாரதி:  வில்லின் விசையடிநீ - கண்ணம்மா           வீசும் விழிச்சுடரில்!  ஒல்லைக் கெதிர்ப்பதந்தான் - காதலின்           ஒற்றை மொழிசொலவோ? (1)  நிறோஷ் ஞானச்செல்வம்:  சொல்லும் மொழிகளிலே - கண்ணம்மா           சொக்க வைத்திடுவாய் எல்லை எங்குளதோ - உன்னுடைய           இன்பப் பூஞ்சிரிப்பில் (2)  விவேக்பாரதி:   சிரிப்பில் புதியவளே - கண்ணம்மா           சிக்கிமுக்கி இதழே உரசல் நெருப்பு...