கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (1-10)
நிறோஷ் ஞானச்செல்வம்: கொல்லயில் தானோடி கண்ணம்மா - நீ கோபச் செந்நிறமோ ஒல்லைக் கெதிர்ப்பதமோ கண்ணம்மா - நீ ஓதக்கடல் நுரையோ! *** விவேக்பாரதி: வில்லின் விசையடிநீ - கண்ணம்மா வீசும் விழிச்சுடரில்! ஒல்லைக் கெதிர்ப்பதந்தான் - காதலின் ஒற்றை மொழிசொலவோ? (1) நிறோஷ் ஞானச்செல்வம்: சொல்லும் மொழிகளிலே - கண்ணம்மா சொக்க வைத்திடுவாய் எல்லை எங்குளதோ - உன்னுடைய இன்பப் பூஞ்சிரிப்பில் (2) விவேக்பாரதி: சிரிப்பில் புதியவளே - கண்ணம்மா சிக்கிமுக்கி இதழே உரசல் நெருப்பு...