கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (51-61)
விவேக்பாரதி இனிக்கும் மதுக்குடமே - கண்ணம்மா இன்பத் திரவியமே! மனிதப் பிறவியிலே - நான்பெறும் மாண்புகள் உன்னருளே! (51) நிறோஷ் ஞானச்செல்வம் அருளொடு பொருளெல்லாம் - கண்ணம்மா அடைந்தனன் என்றிருந்தேன் இருளெனும் மாயையடி - நீயல்லால் எல்லாமும் என்றனுக்கே! (52) வெ.விஜய் கேட்டதைக் கூறடியோ - கண்ணம்மா கேள்வியும் ஏனடியோ பாட்டொன்று பாடடியோ - என்னைப் பத்திரம் போடடியோ (53) விவேக்பாரதி பாடல் பலமிழக்கும் - கண்ணம்மா பார்வைச் சுரத்தின்முன்னே! ஆடல் பொலிவிழக்கும் - ரம்பையரை ஆளுங் குலத்துப்பெண்ணே! (54) நிறோஷ் ஞானச்செல்வம் ஏகாந்தம் இனிக்குதடி - கண்ணம்மா எண்ணச் சுழலுயிர்ப்பில் மீகாமன் ஆகிவிட்டேன் - உன்னையே ...