கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (21-30)
நிறோஷ் ஞானச்செல்வம் கிடப்பில் பலசேதி - கண்ணம்மா கேட்பது யாரோடி நடக்கப் போகையிலே - ஒவ்வொன்றாய் நாமவை பேசிடலாம் (21) வெ.விஜய் பேசும் பறவைகளைக் - கண்ணம்மா பேணி வளர்ப்பதுபோல் வீசும் தென்றலுக்கும் - கண்ணம்மா வெட்கத்தைக் கூறடியோ (22) விவேக்பாரதி அடிகள் அதிகம்பட்டு - நெஞ்சந்தான் அழுது கதறுகையில் பிடியாய்த் துணைக்குவந்தாய் - கண்ணம்மா பிழைத்தேன் உனதருளால் (23) நிறோஷ் ஞானச்செல்வம் ஆலப் பெருமரமாய்க் - கண்ணம்மா அன்பு நிலைத்திருக்கும் கோலச் சித்திரமே - எண்ணத்திற் கொஞ்சும் தமிழழகே! (24) வெ.விஜய் அழகுக் கேற்றவொரு - கண்ணம்மா அன்பு இருக்குதடி நிழலும் பின்தொடரக் - கண்ணம்மா ...