Posts

Showing posts from February, 2021

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (21-30)

Image
நிறோஷ் ஞானச்செல்வம் கிடப்பில் பலசேதி - கண்ணம்மா           கேட்பது யாரோடி நடக்கப் போகையிலே - ஒவ்வொன்றாய்           நாமவை பேசிடலாம் (21)   வெ.விஜய் பேசும் பறவைகளைக் - கண்ணம்மா           பேணி வளர்ப்பதுபோல் வீசும் தென்றலுக்கும் - கண்ணம்மா            வெட்கத்தைக் கூறடியோ (22) விவேக்பாரதி அடிகள் அதிகம்பட்டு - நெஞ்சந்தான்            அழுது கதறுகையில்  பிடியாய்த் துணைக்குவந்தாய் - கண்ணம்மா            பிழைத்தேன் உனதருளால் (23)   நிறோஷ் ஞானச்செல்வம் ஆலப் பெருமரமாய்க் - கண்ணம்மா           அன்பு நிலைத்திருக்கும் கோலச் சித்திரமே - எண்ணத்திற்           கொஞ்சும் தமிழழகே! (24)     வெ.விஜய் அழகுக் கேற்றவொரு - கண்ணம்மா           அன்பு இருக்குதடி  நிழலும் பின்தொடரக் - கண்ணம்மா    ...