Posts

Showing posts from July, 2021

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (51-61)

Image
  விவேக்பாரதி இனிக்கும் மதுக்குடமே - கண்ணம்மா           இன்பத் திரவியமே! மனிதப் பிறவியிலே - நான்பெறும்           மாண்புகள் உன்னருளே! (51)   நிறோஷ் ஞானச்செல்வம் அருளொடு பொருளெல்லாம் - கண்ணம்மா           அடைந்தனன் என்றிருந்தேன் இருளெனும் மாயையடி - நீயல்லால்           எல்லாமும் என்றனுக்கே! (52)   வெ.விஜய் கேட்டதைக் கூறடியோ - கண்ணம்மா           கேள்வியும் ஏனடியோ பாட்டொன்று பாடடியோ - என்னைப்           பத்திரம் போடடியோ (53) விவேக்பாரதி பாடல் பலமிழக்கும் - கண்ணம்மா           பார்வைச் சுரத்தின்முன்னே!  ஆடல் பொலிவிழக்கும் - ரம்பையரை           ஆளுங் குலத்துப்பெண்ணே! (54) நிறோஷ் ஞானச்செல்வம் ஏகாந்தம் இனிக்குதடி - கண்ணம்மா           எண்ணச் சுழலுயிர்ப்பில் மீகாமன் ஆகிவிட்டேன் - உன்னையே       ...

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (41-50)

Image
  வெ.விஜய் சொல்லிய வார்த்தையிலே - கண்ணம்மா           சோகந் தெரியுதடி மெல்ல நடைபயின்றே - என்றன்           மேனி தழுவிடடி (41)   விவேக்பாரதி தழுவிடுந் தென்றல்தரும்  - சில்லெனும்             தண்ணிலை உன்னினைவே மழுவெனக் கண்ணுடையாய் - கண்ணம்மா           மதகரி முன் தோன்றினே ன் (42)   நிறோஷ் ஞானச்செல்வம் ஏனென்ற கேள்வியில்லை - கண்ணம்மா           என்றன் அருகிருக்க நானென்ற எண்ணமில்லை - நீயென்றன்           ஞாலப் பெருந்துணையே! (43)   வெ.விஜய் பெருமை என்றுணர்ந்தே - உன்னைப்           பெற்று வளர்த்தவளை அருமை என்றுசொன்னேன் - கண்ணம்மா           அருகில் நிற்கையிலே (44)   விவேக்பாரதி நிற்பது நீயானால் - கண்ணம்மா           நிலவுக்குக் காய்ச்சல்வரும் சொற்பதம் நீயானால் - என்கவிச்       ...