Posts

Showing posts from June, 2021

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (31-40)

Image
  விவேக்பாரதி வேண்டாத நேரமில்லை - கண்ணம்மா            விரும்பாத நாட்களில்லை  ஆண்டாள் உனைத்தொடவே - கிள்ளையாய்            ஆருடல் திரித்திடுவேன் (31)   நிறோஷ் ஞானச்செல்வம் திரித்த நூல்நுனியில் - செஞ்சுடர்           திரளும் மணிவிளக்கே சிரித்த மலர்முகமே - கண்ணம்மா           சிந்தை மிகுத்தவளே! (32)   விவேக்பாரதி மிகுதிப் பொருள்கொடுத்தும் - வானத்தில்            மின்னல் இடிப்பதில்லை  தகுதிக் குறும்வினையாம் - கண்ணம்மா            தகுந்தநின் பார்வையைப்போல் (33)   நிறோஷ் ஞானச்செல்வம் போர்க்கலை யறிந்தனவோ - நீகொண்ட           பொல்லாப் புருவவிற்கள் பார்க்கையில் நாணேற்றும் - கண்ணம்மா           பாதகம் செய்யாதேடி! (34) வெ.விஜய் தேடும் பார்வையிலே - கண்ணம்மா           தீயும் நிறையுதடி ஓடும்...